மின் கட்டணம் செலுத்துவோருக்கான முக்கிய அறிவித்தல்!

இலங்கை மின்சார சபைக்கு ஒன்லைன் மூலம் கொடுப்பனவுகளை செலுத்தும் நடவடிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோலாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் ஒன்லைன் முறையில் பணம் செலுத்தும் முறை இடைநிறுத்தப்பட்டிருந்தது. எனினும் எதிர்காலத்தில் இலகுவான முறையில் மக்கள் தமது கொடுப்பனவுகளை செலுத்த முடியும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.